Monday, December 2, 2013

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சிவப்பு சந்தன கட்டைகள் சிக்கின: சந்தேக நபர்கள் கைது

இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த 8 இலட்சம் இந்திய ரூபா பெறுமதியுடைய 77.6 கிலோகிராம் சிவப்பு சந்தன கட்டைகளை சுங்க அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் கைப்பற்றியுள்ளனர்.

மதுரை விமான நிலையத்திலிருந்து மிஹின் லங்கா பயணிகள் விமானத்தின் மூலம் கொழும்புக்கு அனுப்பப்படவிருந்த ஏழு சிவப்பு சந்தன கட்டைகளே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை, மூன்று கிரிக்கெட் உபகரண பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக மதுரை சுங்க இணை ஆணையாளர் எ.எஸ்.மீனலோஷினி கூறியுள்ளார்.

இந்த கடத்தல் பொருட்கள் சென்னையிலிருந்து கொழும்பு வழியாக ஹொங்கொங்குக்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கடத்தலை வாஸ் (24), ஷெயங்க் தாவூர் (36), பஷீர் அஹ்மத் (31) ஆகியோரே மேற்கொண்டிருந்தனரென என உள்ளுர் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment