Monday, December 16, 2013

ஓரினச் சேர்க்கைத் தீர்ப்புக்கு எதிராக இந்தியாவில் பேரணி!

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற் றம் என இந்திய மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான ஓரினச் சேர் க்கையாளர்கள் தலைநகர் தில்லியிலும் பிற இடங்களிலும் தங்களது பலத்த எதிர்ப்பை காட்டுவதற்காக எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கைகளில் கறுப்புப்பட்டி கட்டிக் கொண்டு சிலர் வானவில் நிறத்தில் பதாகைகளையும், கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் காலப்பிரிவில் நடைமுறைக்கு வந்த ஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டத்தை மாற்றக்கூடிய அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது எனவும் மேல்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்தியாவிலுள்ள ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் ஆண்களும், பெண்களும் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com