Monday, December 2, 2013

எயிட்ஸ் நோயினால் அழிந்ததோர் இனம் பற்றித் தெரியுமா? -ரஸானா மனாஃப்

தகாத முறையில் உறவை நாடும் அனைவருக்கும் இச் சம்பவம் ஒரு படிப்பினையே!

எயிட்ஸ் நோயினால் அழிந்துபோன ஒரு இனத்தைப்பற்றிய கதை இது.. பாதுகாப்பற்ற உடலுறவை நாடும் அனைவருக்கும் இந்த சம்பவம் ஒரு படிப்பினை.

உலக எய்ட்ஸ் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. உயிர்க்கொல்லி நோயான எய்ட்சின் கோர முகம் குறித்து விளக்குகிறது இந்த கட்டுரை.

உலகில் கொடிய வியாதி எது என்றால் எய்ட்ஸ் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த நோய் நேற்று இன்று தோன்றியது அல்ல. பல நூற்றாண்டுகளாகவே மனிதனை பாதிக்கும் கொடிய நோய் ஆகும்.

பண்டை காலத்தில் மன்னர்களை இந்த நோய் பாதித்துள்ளது என்றும் இதற்கு ராஜநோய் என்று பெயர் சூட்டி இருப்பதும் பழம் ஏடுகள் நமக்களிக்கும் ஆதாரங்கள். இந்த கொடிய நோய்க்கு எய்ட்ஸ் என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.

இந்த கொடிய எய்ட்ஸ் நோய் உலகில் ஒரு இனத்தையே அழித்துள்ளது. அந்தமானில் குற்றவாளிகள் குடியிருப்பு அமைக்க 15.01.1858 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்திய அரசு உத்தரவு எண் 88–ன் படி கேப்டன் எச்.மேன் என்பவர் 22.01.1858 அன்று அந்தமான் தீவுகளுக்கு வந்து பிரிட்டீஸ் கொடியை ஏற்றி இத்தீவுகளை இந்திய அரசுடன் இணைத்தார் என்பது வரலாறு.

குற்றவாளிகள் தப்பி ஓடுவதை தடுக்கவும் அவர்களின் தொல்லையில் இருந்து மக்களை காக்கவும் எடுக்கப்பட்ட முடிவு தான் அது. இதன் அடிப்படையில் முதன் முதலில் தண்டனை பெற்ற 50 ராணுவ வீரர்கள் உள்பட 200 கைதிகளை 4.3.1858 அன்று கொல்கத்தாவில் இருந்து அழைத்து கொண்டு 10.6.1858 அன்று அந்தமானில் கொண்டு சேர்த்தது பிரிட்டீஸ் அரசு.

அந்தமான் தீவுகள் இதற்கு முன்பு நீக்ரோட்டிக் என்ற இனத்தவருக்கு உரிமைப் பட்டதாக இருந்தது. அப்போது அந்தமான் காட்டுப் பகுதியாகவே இருந்தது. கிழங்கு, தேன் எடுப்பது, வேட்டையாடுவது ஆகியவை இந்த அந்தமான் இனத்தவரின் தொழில்.

நீக்ரோட்டிக் இனத்தை சேர்ந்த அந்தமானியர்கள் தங்கள் எல்லைக்குள் ஊடுரு வல்காரர்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. ஆனால் இவர்களால் பிரிட்டீசாரை எதுவும் செய்ய முடிய வில்லை. அந்தமானின் பூர்வீக குடிகளின் அபாயகரமான அம்புகளில் இருந்து தங்களை பாதுகாத்து பிரிட் டீஷ்காரர்களால் முடிய வில்லை.

எனவே அவர்கள் தங்களை பாதுகாக்க குற்றவாளிகளை பலிகடாவாக்கினார்கள். அங்குள்ள அழகிய காடுகளை அழிக்கவும் கைதிகளை பயன்படுத்தினர். கைதிகளை காவலாளிகளாகவும் நியமித்தனர். ஆனால் அவர்களை அந்தமானியர்கள் அம்பு எய்து கொன்றனர்.

1858–ம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலில் காவலாளிகளாக இருந்த 170 கைதிகள் கொல்லப்பட்டனர். தப்பிய கைதிகளை பிடிப்பதற்காக அந்தமானியரை பிரிட்டீசார் பயன்படுத்தினர். இதில் பல உயிர் சேதம் ஏற்பட்டது. அந்தமானியர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தமானிய பெண்கள் பலரை பிரிட்டீசார் அந்தமான் இல்லத்தில் பணிக்கு அமர்த்தினர். அந்தமானியர் இனத்தில் இளம்பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் மணமானவர்கள் மற்றும் தனியாக இருப்பவர்களுக்கு பொதுச் சொத்தாக இருப்பர்.

ஆனால் திருமணமான பின்னர் அவர்கள் வேறு யாரையும் அணுக விடமாட்டார்கள். விதவைகள் ஆனாலும் ஆண்களை பார்த்து சிரிக்க மாட்டார்கள். கடவுளைப் பற்றி எந்த கொள்கையும் இல்லாதவர்கள் இந்த அந்தமானியர்கள்.

இவர்கள் முழு நிர்வாணமாக திரியும் இனமாக இருந்தனர். பெண்கள் மேலாடைக்கு பதில் உடலில் வண்ணப்பூச்சுகளை மட்டுமே பூசுவர். மணப்பெண்கள் எளிதாக கிடைப்பார்கள். மணச்சடங்குகள் விரிவாக எடுப்பது இல்லை. மூத்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணையும், ஆணையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களை கூப்பிட்டு மணமுடித்துவிடுவார். ஆனால் அதற்கு இரு தரப்பு சம்மதமும் கேட்பதில்லை.

திருமணச் சடங்குகளும் நடத்தப்படுவதில்லை. 2 மனைவி உள்ள ஒருவர் 3–வது பெண்ணை திருமணம் செய்யும்போது மட்டும் திருமணச்சடங்கு வைக்கப்படும். 3 பெண்களை மணப்பது, பெண்களை பொதுச் சொத்தாக வைத்து உடலுறவு கொள்வது போன்ற பழக்கங்கள் அந்தமானியரிடம் இருந்தது. அந்த கால கட்டத்தில் அந்தமானிய பெண்களை பிரிட்டீசார் வேலைக்கு எடுத்து அந்தமான் இல்லங்களில் அவர்களை விபசாரிகளாக்கினர்.

இதன் தொடர்ச்சியாக அந்த பெண்கள் மூலம் பரவிய பால்வினை நோயான மேலும் பரவி இன்று அந்த இனமே அழிந்துவிட்டது. 1858–ம் ஆண்டில் அந்த மானியரின் மக்கள் தொகை 15 ஆயிரம், 1901–ம் ஆண்டு 625, 1911–ம் ஆண்டு 455, 1921–ம் ஆண்டு 209, 1931–ம் ஆண்டு 90, 1951–ம் ஆண்டு 33, 1961–ம் ஆண்டு 19, 1971–ம் ஆண்டு 24, 1981–ல் 26, 1991–ம் ஆண்டு 16, 2001–ம் ஆண்டு 10. இன்று அவர்கள் இனமே இல்லை.

பெரிய காயங்கள், அம்பு, துப்பாக்கிகளால் ஏற்பட்ட கொடுங்காயங்களை மண்ணை பூசி குணப்படுத்தி வந்தவர்கள் அந்தமானியர்கள். கொடிய கொசுக்களுக்கு மத்தியில் அடர்ந்த காட்டுக்குள் வசித்த போதும் அவர்களை எந்த வியாதியும் தாக்க வில்லை. ஆனால் எய்ட்ஸ் வியாதி அந்தமானிய இனத்தையே அழித்து விட்டது. விபசாரம், பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கைதான்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com