Saturday, December 7, 2013

தேங்காய் விழுந்து 3 மாதக் குழந்தை பலி !!

அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனைப் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (06) முற்பகல் வீட்டின் முன்னாலுள்ள தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுந்ததில் 3மாதக் குழந்தையொன்று பலியாகியுள்ளது.காயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழ ந்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரும் வழியில் மரணமாகியுள்ளது.

இக்குழந்தையின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment