Saturday, December 14, 2013

மனைவியின் தங்கையையான 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பாலாத்காரம்! - நுரைச்சோலையில் சம்பவம்!

கற்பிட்டி, நுரைச்சோலை பகுதியில் தனது மனைவியின் தங்கையையான 15 வயதான சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 26 வயதான நபரை கற்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது

குறித்த சந்தேகநபர் கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி தனது மனைவியின் பெற்றோர் குறித்த நபலின் வீட்டுக்கு சென்றவேளை சிறுமியுடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னதாக தனது மனைவி மற்றும் அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல், சிறுமியை வீட்டிலிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட நாளிலிருந்து தாம் கணவன் - மனைவியாக வாழ்ந்ததாக சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். வைத்திய பரிசோதனைகளுக்காக சிறுமி கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com