Sunday, December 29, 2013

குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 1305 பேர் 5 தினங்களுக்குள் கைது: அதிர்ச்சியில் பொலிசார்

நாடு முழுவதும் மேற.கொண்ட சோதனை நடவடிக்கையினால் கடந்த 5 நாட்களுக்குள் குடிபோதையில் வாகனம் செலுத்திய 1305 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், நாடு முழுவதும் நேற்று (28) காலை 6 மணி தொடக்கம் இன்று (29) காலை 6 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 246 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 01 பஸ் சாரதி, 39 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள், 79 முச்சக்கர வண்டி சாரதிகள், வேறு வாகன சாரதிகள் 27 பேர் என மொத்தம் 246 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இக் கைதுகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடிபோதையில் தான் அதிகமான சாரதிகள் தொழிற்படுகின்றார்களா எனச் சந்தேகமும் எழுந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com