Sunday, December 1, 2013

அரச வங்கிகளிலிருந்து திறைசேரி பெற்றுக் கொண்ட கடன்தொகை 12000 கோடி ரூபா!

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிப் பகுதியாகும்போது, திறைசேரியானது அரச வங்கிகளிலிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகையானது ரூபா 12000 கோடியாகும் என தெரியவருகின்றது. இது தேசிய உற்பத்தியில் 1.2% ஆகும்.

இதுதவிர, சீனா, ஜப்பான், பிரித்தானிய நாடுகளிலிருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்தும் உலக வங்கி 109 கோடி டொலர் கடன் தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நிதியமைச்சு வட்டாரச் செய்திகள் அறிவிக்கின்றன.

(கேஎப்)

No comments:

Post a Comment