Sunday, December 8, 2013

110 பெண்களை ஏமாற்றி கொலைசெய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை!

சுவிட்சர்லாந்தில் வசித்துவந்த சுவிஸில் டேனியல் 30 என்ற நபர் 16 வயதுமிக்க பெண்ணிடம் நான் உன்னை நகைகளால் அலங்கரித்து புகைப்படம் எடுக்கிறேன் என்றும் அதற்காக 500 பிராங்குகள் தர வேண்டும் என்று ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை மர்மமான முறையில் கொலைசெய்த குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் சுவிஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோல 110 பெண்களை கொலை செய்துள்ளான் என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கில் டேனியலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனினும இந்த தண்டனையை எதிர்த்து இவரது வழக்கறிஞர் மேல்முறையீடு செய்துள்ளார்.

No comments:

Post a Comment