Wednesday, November 27, 2013

மோட்டார் வாகனத்தை வழிமறித்து பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் மூவர் கைது!

கட்டுநாயக்கவில் மோட்டார் வாகனத்தை மறித்து அதிலிருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து மேலுமிருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இவர்கள் மேலும் பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதுமட்டும்லாது சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு மோட்டார் வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment