Wednesday, November 27, 2013

மருதானையில் விபசார விடுதி முற்றுகை! நால்வர் கைது

கொழும்பு பிரதேசத்தில் விபச்சார விடுதிகள் தொடர்ச்சியாக இனங்காணப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மருதானை சங்கராஜ மாவத்தையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்றினை பொலிசார் முற்றிகையிட்டு சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாக வலன பொலிசார் தெரிவத்துள்ளனர்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட விசேட தேடுதல் பிடியாணையைத் தொடர்ந்து இச்சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்விடுதியின் முகாமையாளரும் பெண்கள் மூவருமே கைதுசெய்யப்பட்டு வாழைத்தோட்ட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இச்சந்தேக நபர்கள் பசறை, மொனராகலை, வலப்பன, ரம்புக்கனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் கூறினர்.

இச்சந்தேக நபர்கள் நால்வரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், இவ்விடுதியின் முகாமையாளருக்கு 02 மில்லியன் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, ஒவ்வொரு பெண்ணுக்கும் 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment