Wednesday, November 20, 2013

தலைக்கவசம் தொடர்பான புதிய சட்டம் தற்காலிகமாக நீக்கம்!

மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முழுமையாக மூடும் மற்றும் நிறப்பூச்சு பூசப்பட்ட தலைக்கவசம் அணிவது தொடர்பில் பிறப்பிக்கப்பட்டிருந்த சட்டத்தை செயற்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

புதிய சட்டத்தை பயன்படுத்தி வியாபாரிகள் தலைக்கவசத்தை அதிக விலைக்கு விற்பதால் கொள்வனவாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெிவித்தார்.

எனவே இதனை கருத்திற் கொண்டு பாதுகாப்பு தலைக்கவசம் அணியவென கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இந்தத்தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment