Wednesday, November 20, 2013

நிறைவான சேவைகளை வழங்க அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்- யாழ்.அரசாங்க அதிபர்!

குறைகளை மட்டும் கூறி நியாயப்படுத்துவதை நிறுத்தி இங்கிருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு தேவையான சேவைகளை நிறைவாக செய்ய வேண்டும் என யாழ் . மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது யாழ் . மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார் .

யாழ் . மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமயில் நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார் .

மேலும் யாழ் . மாவட்டத்தில் பல குறைகளும் தேவைகளும் காணப்படுகின்றன எனவே இவற்றை நிவர்த்தி செய்து இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்திச் செயலாற்றவேண்டும். இதனைவிட கிராம அலுவலர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது இருந்தும் மக்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன இத்தகைய செயற்பாடுகள் மூலம் ஏனைய திணைக்களங்கள், அரச தலைவர்கள், மக்களுக்கான சேவைகளை முறையாகச் செய்ய முற்படவேண்டும் எனக்குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment