Saturday, November 23, 2013

பஸ் மோதி நடந்து சென்ற பெண் பலி!

மாத்தறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் பஸ்ஸில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.ஹக்மனவிலிருந்து மாத் தறை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் நேற்று (22) பிற்பகல் மோதுண்டு குறித்த பெண் விபத்துக்குள்ளாகியு ள்ளார். விபத்தின்போது படுகாயமடைந்த பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரி ழந்துள்ளார். உயிரிழந்த பெண் இதுவரை அடையாளங்கா ணப்படவில்லை.ஐந்தடி ஒரு அங்குலம் உயரமுடைய 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவரது சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க ப்பட்டுள்ள அதேவேளை சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (23) இடம்பெறவுள்ளன. சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை இன்று (23) மாத்தறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No comments:

Post a Comment