Tuesday, November 26, 2013

மன்னாரில் பறக்கவிடப்பட்ட புலிக்கொடியால் பெரும் பரபரப்பு

மன்னாரில் எல்.ரி.ரியின் புலிக்கொடி ஏற்றப்பட்ட சம்பவ த்தினைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமும் சோதனை நடவடிக்கைளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் பனங்கட்டிக்கொட்டு–எமிழ் நகர் கிராமத்தில் உள்ள டவர் ஒன்றில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை எல்.ரி.ரியின் புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்த செய்தி காரணமாக மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டுள்ளது.ஆனாலும் அவ்வாறு எந்தவிதமான சம்பவமும் இடம்பெறவில்லையென்று மன்னார் பொலிஸார் அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment