Friday, November 29, 2013

இலங்கை அரச ஒலிம்பிக் பிர­தி­நி­தி­க­ளுடன் சர்வதேச ஒலிம்பிக் குழுவினர் சந்திப்பு

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தலை­மை­யி­லான இலங்சை அரச பிர­திநிதிகள் குழு­வி­னரை லெளசேன் நகரில் சர்­வ­தேச ஒலிம்பிக் குழு பிர­திநிதிகள் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.இலங்­கையில் 1973இல் அமுல்­ப­டுத்­தப்­பட்ட விளை­யாட்­டுத்­துறை சட்ட விதி­களில் நிலவும் நீண்­ட­கால சிக்­கல்­களைத் தீர்க்கும் பொருட்டு இந்த சந்­திப்பு நேற்­று­முன்­தினம் நடை­பெற்­ற­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் குழு வின் உத்­தி­யோ­க­பூர்வ இணையத்­த­ளத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த சந்­திப்பில் இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் பிர­தி­நி­திகள், கோடைக்­கால ஒலிம்பிக் சர்­வ­தேச சம்­மே­ள­னத்தின் சிரேஷ்ட பிர­தி­நி­திகள்இ தேசிய ஒலிம்பிக் குழுக்­களின் சங்கப் பிர­தி­நி­திகள், ஆசிய ஒலிம்பிக் பேர­வையின் பிர­தி­நி­திகள் ஆகி­யோரும் கலந்­து­கொண்­டனர்.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் முன்­வைத்த தெளி­வா­னதும் உறு­தி­யு­மான அணு­கு­மு­றை­க­ளையும் நல்­லெண்ண நோக்­கு­கு­ட­னான கருத்துக்களையும் கலந்துரை யாடல்களில் கலந்துகொண்ட அனைவரும் வரவேற்றனர். ஒரு பொது இணக்கப்பாட்டைக் காணும் வகையில் நடத்தப்பட்ட இந்த சந்திப்பின்போது சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இதன் பிரகாரம் சட்டதிட்டங்கள் ஆறு மாதங்களுக்குள் திருத்தி அமைக்க ப்பட வேண்டும் எனவும் அதுவரை இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை நடத்துவதில்லை எனவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. அது வரை தற்போதைய நிருவாகிகள் சபை தொடர்ந்து பதவியில் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment