Thursday, November 21, 2013

லண்டனில் கொலை செய்யப்பட்ட சிங்கள இளைஞனின் உடல் இலங்கையில்!

கடந்த அக்டோபர் மாதம் 27ம் நாள், பிரித்தானியாவின் யோக்ஷையர் பகுதியில் வைத்து சிங்கள இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டார். டொமினோ பிட்சாவில் வேலை பார்த்து வந்த தவிஷ பீரிஸ் என்பவரே இவ்வாறு கொல்ல ப்பட்டவர் ஆவார். பீட்சாவை கொண்டுசென்று வாடிக்கை யாளருக்கு கொடுக்க முற்பட்டவேளையே அவர் கொல்ல ப்பட்டார். இதன்காரணமாக டொமினோஸ் பீட்சா கம்பெனி, இவரது உடலை இலங்கைக்கு அனுப்பிவைக்கும் பொறு ப்பை எடுத்துள்ளது. அதன் செலவில் கடந்த திங்கட்கிழமை அவரது உடல் கொழும்பு சென்றடைந்துள்ளது.

ஈமைக் கிரிகைகள் இந்த வார இறுதியில் நடைபெறும் என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இவரை யார் கொலைசெய்தார்கள் எதற்காக கொலைசெய்யப்பட்டார் என்பதுபோன்ற விபரங்களை பொலிசார் விசா ரித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment