Tuesday, November 26, 2013

மட்டக்களப்பு, வெல்லாவெளியில் விபத்து; ஐவர் படுகாயம் காயம்!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை சந்தியில் முச்சக்கர வண்டியும் கன்டர் வாகனமும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

பழுகாமம் இருந்து திக்கோடைக்கு சென்ற முச்சக்கர வண்டியை வெல்லாவெளியில் இருந்து கொக்கட்டிச்சோலைக்கு சென்ற கன்டர் வாகனமும் நேர் எதிரே மோதியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை முச்சக்கர வண்டி மீது மோதிய கன்டர் வாகனம் தப்பிச்சென்றுள்ளதாகவும் அவற்றினை கண்டிபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுவரும் வெல்லாவெளி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment