ஏழு மில்லியன் ரூபா பெறுமதியான, இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட பிரதான சந் தேகநபரை கைது செய்வதற்கான உதவியை பொலிஸார் பொதுமக்களிடம் நாடியுள்ளனர். இதற்கிணங்க குறித்த நபர் பற்றிய தகவல்கள் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன. இந்நபர் 973/16, பொதராவ வீதி, மாலம்பே என்ற முகவரி யிலுள்ள வீட்டின் உரிமையாளரான கம்மல்கொட லியனகே பண்துல குமார என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பற்றிய தகவல்களை பொதுமக்கள் 0112422176, 0112326670 மற்றும் 0112320141-5 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும். இதேவேளை 0112380380 என்ற தொலைநகல் இலங்கங்களுக்கும் தகவல் களை வழங்க முடியும் என குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் அறிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment