Sunday, November 3, 2013

பொதுநலவாய நாட்டு தலைவர்களின் ஆரம்ப நிகழ்வு தாமரை தடாக அரங்கில்!

பொதுநலவாய நாட்டு தலைவர்கள் அமர்வுகளின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 15ம் திகதி தாமரைத் தடாக அரங்கில் ஆரம்பமாக உள்ளதுடன் இந்த நிகழ்வுக்கு 50 மில்லியன் ரூபாவரை செலவிடப்பட உள்ளது.

நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வுகளுக்காக மட்டும் ஐம்பதில் மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்கு சமாந்திரமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன் கண்காட்சிகள், அமர்வுகள், கருத்தரங்குகள், உணவு விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment