Wednesday, November 13, 2013

நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங்களின் கட்டிடங்களிலும் தேசிய கொடியை ஏற்றுக!

இலங்கையில் நடைபெறும் 23 ஆவது பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் இரண்டாவது பதவி ஏற்பின் 4 ஆவது வருட நிறைவு விழாவையும் முன்னிட்டு நாளை (14) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாடு பூராவுமுள்ள சகல அரச நிறுவனங் களின் கட்டிடங்களில் தேசிய கொடியேற்றுமாறு பொது நிர் வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரியுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், சகல அமைச்சுக்களின் செயலாளர்கள் அடங்கலான சகல அரச நிறுவன தலைவர்களு க்கும் சுற்று நிருபம் ஊடாக அறிவித்துள்ளார். இதேபோன்று தனியார் நிறுவன ங்கள், வீடுகள் என்பவற்றிலும் தேசிய கொடியேற்றுமாறு அரசாங்கம் கோரியுள் ளது.

No comments:

Post a Comment