Thursday, November 21, 2013

ஏ.டி.ஏம்-யில் பணம் எடுக்கச் சென்ற பெண்ணை அரிவாளால் தாக்கிய நபர்......(வீடியோ)

பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியை, மர்ம நபர் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற காட்சி காணொளியில் வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூர் ராஜராஜே ஸ்வரி நகரை சேர்ந்த ஜோதி உதய (37) .ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இவர் நேற்று காலை 7.10 மணி அளவில் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் இருக்கும் வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றார்.

இந்நிலையில் ஜோதி பணம் எடுக்கும்வரை காத்திருந்த மர்ம நபர் ஒருவர் சட்டெ ன்று உள்ளே புகுந்து ஏ.டி.எம். ஷட்டரை கீழே இறக்கி பூட்டினார். அவரை பார்த்ததும் ஜோதி பயந்துபோய் வெளியே செல்ல முயன்றார்.ஆனால் அவரை தடுத்து நிறுத்திய அந்த மர்ம நபர் துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டினார். திடீரென்று ஜோதியை தலையில் அரிவாளால் வெட்டினார். இதில் ஜோதி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பின்னர் அவரிடம் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த மர்ம நபர் ஷட்டரை திறந்து வெளியே வந்து, மீண்டும் பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் ஏ.டி.எம். வாசலில் ரத்தம் படிந்திருப்பதை பார்த்து வங்கி அதிகாரிகளுக்கும், பொலிசிற்கும் தகவல் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோதியை மீட்டு விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் மோப்ப நாய் வரவழைத்து சோதனை நடத்தப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் அத்துடன் நின்றுவிட்டது. ஜோதி அணிந்திருந்த நகைகள் கொள்ளை போகவில்லை.மேலும் அவரது பையில் இருந்து ரூ.15 ஆயிரம் மற்றும் கைப்பேசியை அந்த நபர் எடுத்துச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.ஏ.டி.எம். மையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கமெராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி இருந்தது. எஸ்.ஜே.பார்க் பொலிசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment