Saturday, November 30, 2013

ஜேர்மன் பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சாரதி.......

வென்னப்புவ பிரதேச ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவரைப் துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்றதாக கூறப்படும் வான் சாரதி ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இவோனியர் ஸ்லேஷ் (வயது 41) என்ற பெண்ணையே வானின் சாரதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன் றுள்ளார்.

குறித்த பெண் மற்றொரு பெண்ணுடன் இலங்கைக்குச் சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவ்விருவரும் வென்னப்புவ உல்லாசப் பயணிகள் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து அங்கிருந்து கடந்த திங்கட்கிழமை சீகிரியாவைப் பார்வையிடுவதற்காக வாடகை வான் ஒன்றைப் அமர்த்திச் சென்றுள்ள னர்.இவ்வாறு சென்றிருந்த சமயமே குறித்த வானின் சாரதி தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக குறித்த பெண் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பின் தான் தங்கியிருந்த ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் ஹோட்டல் முகாமையாளரின் அறிவுறுத்தலுக்கமைய அந்த பெண் வென்னப்புவ பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இம் முறைப் பாட்டையடுத்து குறித்த வான் சாரதியைக் கைது செய்ய நடவடிக்கை மேற் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 comment:

  1. sex has become an incurable desease
    sex crimes are increasing in a
    unbelievable speed.

    ReplyDelete