Sunday, November 3, 2013

மாங்குளத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

மன்னார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மன்னார் நகரில் கஞ்சா வைத்திருந்த ஒருவர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டதுடன் இவரிடமிருந்து ஒரு கிலோ 560 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மன்னார் தாழ்ப்பாடு பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்றையதினம் மன்னார் சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மாங்குளம் மல்லாவி வீதியில் 5 கிலோ 150 கிராம் கஞ்சாவுடன் கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மாங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் இன்றையதினம் சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment