Friday, November 15, 2013

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை கைது

சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஆனமடுவ ஆடிகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 41 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையான சந்தேகநபரிடம் கடவுச்சீட்டோ அல்லது விசாவோ இருக்கவில்லை என்பதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய ஆனமடுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment