Tuesday, November 26, 2013

இலங்கை தமிழர் தொடர்பில் காங்கிரஸ் சென்னையில் மாநாட்டை நடத்துகிறது

இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுவது தொடர்;பில் இந்திய காங்கிரஸ் கட்சி சென்னையில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. அமைச்சர் பி சிதம்பரம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் புத்திஜீவிகள், கட்சி பிரதிநிதிகள் உட்பட்ட பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை தமிழர்களின் உரிமைகளும் இந்தியாவின் நிலைப்பாடும் என்ற தலைப்பிலேயே இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்தின் தகவல்படி, இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment