Saturday, November 30, 2013

பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த சுதேச மல்யுத்த பயிற்சி!

இலங்கையின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சுதேச மல்யுத்த பயிற்சியை மீண்டும் உயிர்ப்பிக்கும் வகையிலும் பெண்கள் தங்களது பாதுகாப்பை தாங்களே உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையிலும் அக்கலையை கற்பிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கலை மற்றும் கலாசார அமைச்சர் ரீ.பீ.ஏகநாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் யாப்பகுவா, திபிரிகலே பிரதேசத்தில் அமைந்துள்ள அங்கம்பொர கிராமத்தில் ஆறு மாத கால பாடநெறி என்ற அடிப்படையில் இக்கலை கற்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

1 comment:

  1. Very very good, please extend this one To North east tooo.

    ReplyDelete