Wednesday, November 27, 2013

தொலைபேசியில் மிரட்டி கப்பம் பெற்ற இரு பெண்கள் கைது

தொலைபேசியில் மிரட்டி கப்பமாக பணம் பறித்து வந்த இரு பெண்களை மிரிஹான விசேட குறிறத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஹோமாகம மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் வைத்தியர் ஒருவரிடமும் பேராசிரியர் ஒருவரின் மனைவியிடமும் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்து பணத்தினை தமது வங்கிக்கணக்குகளினூடாக பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மிரிஹான விஷேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகண தெரிவித்தார்.

No comments:

Post a Comment