Wednesday, November 27, 2013

பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி படுகொலையுடன் தொடர்புடைய மூவர் பலி!

கம்புறுபிட்டிய, வலஸ்முல்லையில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத் துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் குளத்தில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமாராகம, பத்தேகமுவையில் வைத்து கைது செய்யப் பட்ட இருவரும் தெனகம குளத்திற்கு அருகில் தாம் மறைத்து வைத்திருக்கின்ற கைக்குண்டு மற்றும் ஆயுதங்களை காண் பிப்பதற்காக பொலிஸாரினால் அழைத்து சென்றபோதே இவ்விருவரும் குளத்தில் திடீரென பாய்ந்துள்ளனர்.

அவ்விருவரையும் காப்பாற்றுவதற்கு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் குளத்தில் பாய்ந்த போதும் அந்த முயற்சி கைகூடவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் ஏற்ககெனவே பலியானதுடன் பிரதான சந்தேகநபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment