Tuesday, November 26, 2013

எனக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது! ரோஹண

எனது கட்சியினால் எனக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் தான் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்தததாக மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரோஹண பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பல ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மத்திய மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபேகோன் முன்னிலையில் விசேட உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் ரோஹண பண்டாரநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தனதுயிரை பாதுகாப்பதற்கு மாகாண சபை தவிசாளர் என்ற வகையில் எடுக்க முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அடுத்த குழு கூட்டத்தில் இது தொடர்பாக எடுக்க வேண்டி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என தவிசாளர் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபையில் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்த அந்த மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரோஹண பண்டாரநாயக்க மாகாண சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கடந்த மத்திய மாகாண சபை கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் நெருக்கடி ஏற்பட்ட போது நாம் ஒரு புறமிருந்ததனால் இன்று எனக்கு மரண அச்சுறுத்தல் எற்பட்டள்ளது. எம்மீது சேறு பூசும் முயற்சிகள் முன்னெடுக்கபடுகின்றன. எதிர்கட்சியின் அமைப்பாளருக்கும் இதனை அறிவித்தேன். இப்பிரச்சினை முடிவுக்கு வரும் வரை நான் சுயாதீன உறுப்பினராக செயற்பட தீர்மானித்துள்ளேன்.

No comments:

Post a Comment