Friday, November 29, 2013

காணாமல் போனவர்களின் உறவுகளிடம் சம்மந்தன் வாங்கிக் கட்டியது போல் இன்னும் இருக்கு காத்திருங்கள்! சித்தன்

வடமாகாண சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்ததும் பல உரிமைகளை வென்றுதருவோம் என்று மார்பு தட்டியவர்கள். மாலைகள் கழுத்தில் வாங்கவும், திறப்பு விழா கொண்டாடுவது எமது நோக்கம் இல்லை என்பவர்கள் இன்று அதனை மட்டுமே செய்வதும் வேதனைக்குரியது.

இது மட்டும் இல்லை சத்தியபிரமாணம் செய்வது மகிந்தாமுன் தான் என்று அடம்பிடித்தவர்கள். அப்படியே செய்து தன் மரியாதையைக் காட்டியவர்களே, மக்கள் உரிமையினையும் அவர்கள் விருப்பினையும் ஏற்று நடக்காதவர்களாக இருப்பது கண்டனத்துக்குரியது.

தினமும் வரவேற்பு விழா கழுத்தில் மாலை என அங்கும் இங்குமாக ஓடித் திரிந்து கொண்டிருக்கின்றனர். மாவீரர் பெயர் சொல்லி ஆசனம் ஏறியவர்கள் கள்ளர்கள் போல் கோடிக்குள் மரத்தினை மட்டும் நாட்டுகிறார்கள். இப்படி பல தவறுகளை தினமும் செய்த வண்ணம் உள்ளனர்.
உங்கள் ஆட்சியினை பார்த்தால் நீங்கள் தமிழக அரச தலைவர்களை வென்று விட்டியல் போல் அல்லவா இருக்கின்றது.

சிறிதரன் புலித் தலைவரை புகழ்ந்து பேசியதும் அதற்கு மாறாக சிறிதரனை சம்பந்தன் ஜயா கண்டனம் தெரிவித்ததும் கபட நாடகம் உச்சக்கட்டம். கபட நாடகம் ஆடுவதினை மக்கள் ஏற்க்க மாட்டார்கள். தமிழக மக்களுக்கு ஒரு கருணாநிதி இருப்பது போல் எமக்கு சம்பந்தன். இப்படியான செயலை மக்கள் நன்கு அறிவார்கள். தகுந்த நேரம் பாடம் புகட்டும் நேரம் தொலைவில் இல்லை.

உங்கள் சுத்துமாத்துகளுக்கு பதில் சொல்லும் காலம் இது.

1 comment:

  1. Aattu manthai Chellangalae!

    INIAAVATHU Kannai THuranthu paarungal!

    Neengal Yaaradaa??

    Ungal peyarai suruttiravan yaaaaaaaaaarrrrrrrrrrrrrrrr????????????????


    Inam kaanungal +++++ porukkikalai!!!!!!!!!!!!

    ReplyDelete