Wednesday, November 27, 2013

தாலிக்கொடியை அறுத்த பெண் பொதுமக்களால் பிடிக்கப்பட்டார்! யாழ். உடுவிலில் சம்பவம்

யாழ். உடுவில் பகுதியில் இன்று(27.11.2013) காலை 9.45 மணியளவில் பெண்ணொருவர், வீட்டில் தனிமையிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திவிட்டு நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு முன்னாள் ஒரு மரணவீடு ஒன்று நடைபெற்றதை அறிந்த பெண் கூச்சலிட்டதை தொடர்ந்து மரண வீட்டில் கலந்துகொண்டவர்கள் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டோடிய பெண்ணை துரத்திப் பிடித்து சுன்னாகம் பொலிஸில் ஒப்படைத்தனர்.

குறித்த பெண்ணிடமிருந்து தாலிக்கொடி மீட்கப்பட்டதுடன் கத்தி குத்துக் கிலக்காகி காயத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment