Wednesday, November 27, 2013

குறும் செய்திகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி

வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை குறித்து அனுப்பப்படும் குறும் செய்திகளுக்கு ஏற்றவாறு வங்கிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் அறிவித்துள்ளது.

நாடெங்கும் பொதுத்துறை வங்கிகளில் நடக்கும் பண பரிவர்த்தனை குறித்து வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது குறும் செய்தி மூலம் தெரிவிக்கப்படுகிறது இந்த குறும் செய்திகளுக்கு கட்டணம் வசூலிக்கலாம் என்றும், அனுப்பபடும் குறும் செய்திகளுக்கான பண பரிவர்த்தனை மற்றும் குறும் செய்திகளுக்கு ஏற்ப கட்டணங்களை நிர்ணயிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும், ஸ்டேட் பேங்கில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பபடும் குறும் செய்திகளுக்கு வருடம் ஒன்றுக்கு 60 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment