Saturday, November 30, 2013

கணவரை கொலை செய்த கோடீஸ்வரிக்கு விளக்கமறியல் நீடிப்பு !!

தனது கணவரான விசேட அதிரடிப்படையின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் துசித்த குமாரசிறி (வயது 34) என்பவ ரைக் கடத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஹிமாலி கருணாரத்ன (வயது 49) என்ற கோடீஸ்வரியை எதிர்வரும் டிசெம்பர் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் வசந்த ஜினதாச நேற்று (29) உத்தரவிட்டார்.

சந்தேகநபராக கோடீஸ்வரியை இதய நோய்கள் தொடர்பான விசேட நிபுணர் ஒருவரிடன் காண்பித்து அவருக்கு சிகிச்சையளிக்குமாறு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த போதும் சிறைச்சாலை அதிகாரிகள் அதனை நடைமுறை ப்படுத்தவில்லை என்று அவர் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment