Thursday, November 28, 2013

இறந்த நபர் கல்லறையில் உயிருடன் தோன்றிய அதிசயம்!!

போலந்து நாட்டில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது கல்லறையின் மேல் நின்று தான் உயிரோடு இருக்கிறேன் என்று அறிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியட்லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ் லாவ் கரோலின்ஸ்சி(38). இவர் எவருக்கும் அறிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இதனைத் தொடர்ந்து உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள காட்டில் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தமது மகனுடையது என பெற்றோர் தவறுதலாக கருதி அந்த உடலை கல்லறையில் நல்லடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்பிய ஜரோஸ்லாவ் தனது கல்லறைக்கு பெற்றோர் பூங்கொத்து வைத்து அஞ்சலி செலுத்துவதைக் பார்த்துள்ளார்.

பின்னர் தனது ஏறிய ஜரோஸ்லாவ் ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்துவிட்டேன் எனத் தெரிவிக்கவும் அதிர்ச்சிக் குள்ளாகிய அவரது தாயார் மயங்கி விழுந்துள்ளார்.மகன் உயிருடன் திரும்பியதால் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மகன் எதற்காக வீட்டைவிட்டு வெளியேறினார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிட ப்படவில்லை. இந்நிலையில் புதைக்கப்பட்ட சடலம் யாருடையது என கண்டறிய பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com