Monday, November 4, 2013

வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ் சேவை!

30 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக குறித்து போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா பஸ் டிப்போவின் உதவி செயலாற்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ் சேவை இல்லாத காரணத்தினால் மக்கள் பெரும் அசௌ கரியங்களுக்கு முகங் கொடுத்து வந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களின் நலன்கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அதனொரு கட்டமாக வவுனியாவிலிருந்து காரைநகருக்கான நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இது வவுனியாவிலிருந்து பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி ,ஒட்டுச்சுட்டான், புதுக்குடியிருப்பு பரந்தன் ஊடாக காரை நகரை சென்றடையவுள்ளது. இன்று பிற்பகல் 01 மணிக்கு முதலாவது பஸ் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக வவுனியா பஸ் டிப்போ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment