Monday, November 4, 2013

ஐ.தே.க மோதலில் கைதான மாகாண சபை உறுப்பினரின் தந்தைக்கு பிணைவழங்க யாரும் இல்லை! மீண்டும் விளக்கமறியலில்!

அண்மையில் மாத்தறை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மோதலில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற் றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென்மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணர்தனவின் தந்தையான ஹேமன் குணரத்ன இன்று மாத்தறை மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட வேளையில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதனால் மேல் நீதிமன்றத்திற்கு பிணை மனுவை சமர்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாத்தறை நீதிமன்றம் ஹேமன் குணரத்னவிற்கு பிணை வழங்க தீர்மானித்தது. இருப்பினும் பிணை வழங்குவதற்காக அவரது உறவினர்கள் எவரும் நீதிமன்றத் திற்கு வருகை தராமையினால் மீண்டும் அவiர் எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

No comments:

Post a Comment