Monday, November 18, 2013

ரஷ்யாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 50 பயணிகள் உடல் கருகி பலி!

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, தரையில் மோதி தீப்பிடித்து விபத்துக்கு உள்ளான தில், 50 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி யானார்கள்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள தோமோதே தோவோ விமான நிலையத்தில் இருந்து 44 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று(17.11.2013)மாலை புறப்பட்ட விமானம் மாஸ்கோவில் இருந்து 800 கி.மீ தொலைவில் உள்ள கசான் நகரில் தரையிறங்கும் போது மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாது இருந்த நிலையில் மிகவும் கஸ்ரமான நிலையில் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக தரையில் மோதியதில் தீப்பிடித்தது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 44 பயணிகள், 6 ஊழியர்கள் என 50 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர்.

இந்த விபத்தில் ததர்ஸ்தான் கவர்னரின் மகனும், புதுமாப்பிள்ளையுமான ஐரக் மின்னிகானோவ் (23), உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் ஆன்டானோவ் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர் என்றனர்.

இதனை தொடர்ந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment