Monday, November 18, 2013

சிறுவர் ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் 348 பேர் கைது!

சிறுவர் ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் 3 வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது உலகளாவிய ரீதியில் 348 பேர் கைது செய்யப்பட்டுள் ளதுடன், குறைந்தது 400 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுவர்களது நிர்வாண படங்களைக்கொண்ட வீடியோக்கள் மற்றும் இறுவெட்டுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரொரன்டோவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமொன்று விசாரணைக்குட் படுத்தப்பட்டது.

சிறுவர்கள் நிர்வாணமாக தோன்றுவதை வெளிப்படுத்தும் காட்சிகளை படமாக் குவது கனடாவிலும் அமெரிக்காவிலும் சட்டபூர்வமாக அஸொவ் பிலிம்ஸ் என்ற மேற்படி நிறுவனம் உரிமை கோரி வருகிறது.

அந்நிறுவனத்தின் வீடியோ காட்சிகள் 94 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன இதனையடுத்து சிறுவர் ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் கனடாவில் 08 பேரும் அமெரிக்காவில் 76 பேரும் ஏனைய நாடுகளில் 164 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் அதுமட்டமல்லாது அஸொப் பிலிம்ஸின் தலைவரான கனடாவைச் சேர்ந்த பிறையன்வே (42 வயது) 2011ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அந்த நிறுவனமும் மூடப்பட்டுள்ளது.

இந்த ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா, ஸ்பெயின், மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, நோர்வே, கிறீஸ், அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் தற்போதும் பல நாடுகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1 comment:

  1. Does the PM of CDN knows what is happening inside his country...? What kind of violation is this..?

    ReplyDelete