Thursday, November 28, 2013

33 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இந்தியாவிற்கு கடத்த முற்பட்ட மூவர் கைது!

676 கிராம் நிறையுடைய 33 இலட்சம் ரூபாவா தங்க நகைகளை சென்னைக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட களுபோவில பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஜெட் எயார்வேஸ்க்குச் சொந்தமான 9W253 ரக விமானத்தில் சென்னை புறப்படவிருந்த இவர்களை சுங்கப் பிரிவினர் சோதனையிட்ட போதே இந்ததங்கநகைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

களுபோவில பகுதியைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவரும் 38 வயது பெண் ஒருவரும் 15 வயது சிறுமி ஒருவருமே இவ்வாறு தங்க நகைகளை கடத்த முயன்றதுடன் இவர்களிடமிருந்து மெருகூட்டப்படாத 10 காப்புகள்,3 நெக்லஸ்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment