Tuesday, November 26, 2013

20 வயது இளம் பெண்ணை காட்டில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த ஐவர் கைது!

புத்தளம் – சீரம்பியடி பகுதியைச் சேர்ந்த திருமணமான 20 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான இளம் யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஐவர் சிறிமாபோதிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

இதே சமயம் சம்பவதினம் குறித்த பெண்ணுடன் ஒருவர் புத்தளம் – பாலாவி பகுதிக்குச் சென்றபோது அப்பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில் ஐவர் ஒன்று சேர்ந்து பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை கைது செய்த புதளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment