Wednesday, November 27, 2013

விசேட தேவைக்குட்பட்ட 16 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 65 வயது முதியவர் கைது

வவுனியா செட்டிகுளம் வீடியா பாம் கிராமத்தில் விசேட தேவைக்குரிய 16 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் 65 வயதுடைய வயோதிபர் செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அதிகாரி ஜெ. ஜெயக்கெனடி தெரிவித்தார்.

விசேட தேவைக்குரிய இச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோதே இவ் வயோதிபர் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதனையடுத்து செட்டிகுளம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரை நேற்று முன்தினம் மாலை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment