Tuesday, November 26, 2013

குழந்தையை அடித்துக் கொன்ற தந்தைக்கு14 நாட்கள் விளக்கமறியலில்

யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இடையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது சீலன் டிலக்ஷன் என்ற தனது குழந்தை கொலை செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியலில்வைத்து விசாரிக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராற்றில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலனில்லாமல் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

இதனை தொடர்பாக தந்தையைக் கைது செய்த பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் மேற்படி நபரை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே குறித்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment