Tuesday, November 26, 2013

14 மாணவர்களுடன் பாலியல் சேட்டை: கல்லூரி அதிபர் கைது

வேலியே பயிரை மேய்ந்த கதையாக 14 மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அதிபர் ஒருவரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹப்புத்தளை, ஹல்துமுல்லை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம்-7 மற்றும் தரம்-8 யை சேர்ந்த 12 வயது மற்றும் 13 வயது மாணவர்களையே குறித்த வித்தியாலயத்தின் அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 14 மாணவர்களும் மருத்துவ சோதனைக்காக தியத்தலாவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 comment:

  1. This has been common in the churches in western countries.

    ReplyDelete