Wednesday, November 20, 2013

பேஸ்புக் ஆபாச பதிவால் மனமுடைந்த 14 வயது சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை!

பேஸ்புக்கில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து அனுப்பிய ஆபாச பதிவுகளால் மனமுடைந்த 14 வயது மும்பை காந்திவ்லி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

9ஆம் வகுப்பு படித்து வரும் குறித்த சிறுமியின் பேஸ்புக் இணையதள பக்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தொடர்ந்து ஆபாச செய்திகளை பதிவு செய்து வந்துள்ளான் இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுமி தனது பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவளது பெற்றோர் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் ஆனால், இப்புகார் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பள்ளி முடிந்து திரும்பிய அச்சிறுமி, தனது அறைக்குள் சென்று படிக்கப் போவதாகக் கூறிச் சென்றுள்ளார் ஆனால் இரவு வெகுநேரமாகியும் சிறுமி அறைக்கதவை திறந்து வெளியில் வராதததை தொடரந்து சந்தேகமடைந்த அவளது பெற்றோர் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சிறுமியின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இதே வேளை சிறுவன் தொடர்ந்து கொடுத்த தொல்லையே சிறுமியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்த அவளது பெற்றோர் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com