Friday, November 22, 2013

10 கோடி ரூபா பெறுமதியான சந்தனக் கட்டை கொழும்பில் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் இன்று (22.11.2013) காலை சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான 4 மெட்ரிக் டொன் சந்தன மரக் கட்டைகள் அடங்கிய கொள்கலன் ஒன்று சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்தார்.

இந்த சந்தனக் கட்டை இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வழியாக டுபாய்க்கு கொண்டு செல்லப்படவிருந்ததாக அவர் குறிப்பிட்டதுடன் சம்பவம் தொடர்பில் பக்கல் நிறுவனம் ஊடாக விசாரணை மேற்கொண்டு வருவதாக சுங்கப் பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment