Monday, November 25, 2013

10 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 100 வருட சிறை!

தனது 10 வயது மகளை நிர்வாணமாக படம்பிடித்து பல நாட்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை குற்ற வாளியாக இனங்காணப்பட்டதையடுத்து நீதவான் கடும் வேலைகளுடன் கூடிய 100 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பியசீலி விக்ரமசிங்கவே மேற்கண்டவாறு இன்று திங்கட்கிழமை தண்டனை விதித்ததுடன் குற்றவாளியான தந்தைக்கு 90 ஆயிரம் ரூபா தண்டமும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபரான தந்தைக்கு எதிராக விதிக்கப்பட்ட 12 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்டார்.

1 comment:

  1. regrettable,sorrowful what happened to her dummy mother.

    ReplyDelete