Wednesday, September 11, 2013

புதுடில்லி சம்பவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதா? இல்லையா? இன்று தீர்ப்பு!

மருத்துவ மாணவி இந்தியாவில் பஸ் வண்டியில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்ற வாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதா இல்லையா என்ற தீர்ப்பு நாளை வழங்கப்படும்.

புதுடில்லி நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் வண்டி யொன்றில் வைத்து கடந்த டிசம்பர் 16ம் திகதி குறித்த மருத்துவ பீட மாணவி, மனிதாபிமானமற்ற முறையில் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த இந்திய நீதிமன்றம், 4 சந்தேக நபர்கள் இதில் குற்றவாளிகளென, தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதா? இல்லையா என்ற தீர்ப்பு நாளை வெளியிடப்படும்.

நீதிமன்றத்திற்கு முன்னால் கூடிய பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், குற்றவாளிகளை தூக்கிலிடும்படி, கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment