Saturday, September 14, 2013

அரச ஆட்சேர்ப்பு விதிமுறையை தளர்த்தி வடக்கிற்கு நிர்வாக அதிகாரிகள் நியமனம்!

வடமாகாணத்தில் தமிழ் பேசும் அரச உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால் அப்பிர தேசத்திற்கு சிறந்த சேவையைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணத்துடன் அரச ஆட்சேர்ப்பு விதிமுறையை தளர்த்தி அரச நிர்வாக சேவைக்கு தமிழ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இவ்விதம் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் தரத்தைக் குறைப்பது நல்லதல்ல என்று அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்த போதிலும் வடபகுதியில் உள்ள தமிழ் பேசும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment