தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அமைதியாக இடம்பெறு கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பு, குரோத மொழியொ ன்றை பயன்படுத்துவதாக, கெபே அமைப்பு தெரிவித்து ள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், அதன் ஏற்பாட்டாளர் கீர்த்தி தென்னகோன் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெறும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் இது. கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாமல், ஏராளமானோர், வாக்குரிமையை இழந்துவிட்டார்கள். நாம் ஆட்பதிவு திணைக்களத்துடன் இணைந்து அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுப்பதற்கான 41 நாள் திட்டத்தை முன்னெடுத்தோம்.
அரசாங்கம் இதற்கு முழு அளவிலான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங் கியது. வடக்கின் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் பேராதரவு காணப்படுகிறது. பொது சொத்துகளை பயன்படுத்துவது தொடாபாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் மிகப்பாரியதாகும்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அங்கீகரிக்க முடியாத அளவு மிக குரோதமான மொழியை பயன்படுத்தி, தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதியான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது, என்பதை கூற வேண்டும்.
No comments:
Post a Comment