Wednesday, September 11, 2013

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண தேர்தல் குறித்து நேரடியாக ஆராய்வு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் ரொபின் மூடி வடமாகாண தேர்தல் குறித்து யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோரை சந்தித்து வடக்கு தேர்தல் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள அரச அதிபரின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றதுடன் இதன்போது மாகாண சபை தேர்தலுக்கான சூழ்நிலைகள் எவ்வாறு காணப்படுகின்றன என்றும் அவர் கேள்வியை எழுபியுள்ளார்.

இதற்கு பதிலளித்த உதவித்தேர்தல் ஆணையாளர் மக்கள் தேர்தலில் ஆர்வத்துடன், இருப்பதுடன், தேர்தல் சூழ்நிலைகள் சுமூகமான நிலையில் இருப்பதாகவும் வன்முறைச் சம்பவங்கள் குறைவாக காணப்படுகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment